Thursday, February 10, 2011

2. அசைவ உணவு நோயற்றதா?

2.1. மிருகங்களின் உடல்களிலும் நோய்கள்

கொல்லப்படும் மிருகங்களின் உடலிலும் மனிதனின் உடலைப் போலவே எண்ணற்ற நோய்களும், நோய்க்கிருமிகளும் உள்ளன என்பதையும், உண்பவரின் உடலை அவை எளிதில் அடைகின்றன என்பதையும், அசைவ உணவு உண்பவர்கள் மறக்கக் கூடாது.

உதாரணமாக 1972 ல் ஏறக்குறைய கண் புற்று நோய் உடைய ஒரு லட்சம் மாடுகளும் , கல்லீரலில் சீல் பிடித்த கட்டியுடைய 35 லட்சத்து 96 ஆயிரத்து 302 மாடுகளும், கப வாதம் போன்ற நோய் உடைய லட்சக்கணக்கான கோழிகளும் அமெரிக்க அரசங்கத்தால் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டன.

2.2. இறந்த உடல் விரைவில் அழுகும்

images 2 copyகொல்லப்பட்ட மிருகங்களின் உடல் விரைவில் அழுக ஆரம்பித்துவிடும் என்பதையும், உண்பதற்க்கு முன் பாக்டீரியாக்கள் பெருகி, அழுகிய நிலையை அந்த உடல் அடையும் என்பதையும், அசைவ உணவு உண்பவர்கள் மறக்கக் கூடாது.

2.3. மரண பய விஷம் இறந்த உடலில் உண்டு

கொல்லப்படும் மிருகங்கள், மரண பயத்தினால் சுரக்கக் கூடிய அட்ரீனலின் ரத்தத்துடன் கலந்து, அவற்றின் உடல் விஷத் தன்மையை அடைகிறது. உண்பவரையும் அந்த விஷம் அடைகிறது.

2.4. மிருக உடலைப் பாதுகாக்கும் மருந்து மனிதனுக்கு கேடு

மிருகங்imagesகளை நோயிலிருந்து காப்பாற்றவும், அவைகளின் எடையைக் கூட்டுவதற்காகவும், வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காகவும் பெனிசிலின் மற்றும் 2700 விதமான மருந்துகளை கால்நாடை வளர்ப்போர் தொடர்ந்து அம்மிருகங்களுக்கு கொடுக்கின்றனர். அம்மிருகங்கள் இறந்த பின்னும் அவற்றின் உடலில் '” டைதில்ஸ்டில் பெஸ்ட்ரேல்  டிஇஎஸ் ஆர்ச்செனிக்,  சோடியம் நைட்ரேட் போன்ற மனி்த உடலுக்கு பெரிதும் கெடுதி விளைவிக்கக் கூடிய  கொடிய விஷங்கள் உள்ளன. இதனால், இத்தகைய அசைவ உணவை உண்பவர்கள் ஏராளமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.

2.5 அசைவம் உண்ணும் மனிதனின் உடலும், குடலும் நோய்களின் இருப்பிடம்.

மனிதனின் உடலமைப்பு அசைவ உணவை உண்பதற்கும், ஜீரணிப்பதற்க்கும், வெளியேற்ருவதற்க்கும் பொருத்தமில்லாமல் அமைந்திருப்பதால் ஏராளமான நோய்கள், அசைவ உண்பவர்களுக்கு உண்டாகிறது. மனிதனுடைய குடல் அசைவ உணவை சரியாக ஜீரணிக்க முடியாததாலும் விரைவில் அழுகக் கூடிய அசைவ உணவு மனிதனின் நீண்ட குடலில், அதிக நேரம் தங்குவதாலும் குடல் புற்று நோய் உண்டாகிறது. இறந்த மிருகங்களின் உடலில் உள்ள அளவற்ற கொழுப்பு, மனிதனின் இரத்தத் தமனிகளின் உட்சுவர்களில் படிந்து அவற்றை பெருக்கச் செய்கிறது. அதனால், இருதயத் தாக்கு, இரத்த உறைவு போன்ற பயங்கரமான நோய்கள் ஏற்படுகின்றன. அசைவ உணவை ஜீரணிப்பதில் அதிகமாகப் பாடுபடுவதால் உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் விரைவில் பாதிக்கப்படுகின்லறது.

அடு்த்து பதிவு (3. அசைவ உணவு சுவையானதா )

இஸ்கான்.

ஹரே க்ருஷ்ணா

 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp