Tuesday, November 23, 2010

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-4 பாதம் –22

clip_image001

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 4

பாதம் – 22

த்யக்த்வா கர்ம பலாஸங்கம் நித்ய த்ருப்தோ நிராஷ்ரய

கர்மண் யபிப்வ்ருத்தோ அபி நைவ கிஞ்சித் கரோதிஸ

த்யக்த்வா – துறந்து

கர்மபலஆஸங்கம்- பலன்களின் மீதான பற்றை

நித்ய –எப்போதும்

த்ருப்த – திருப்தியுற்று

நிராஷ்ரய – எதையும் சாராமல்

கர்மணி – செயலில்

அபிப்ரவ்ருத்த – முழுமையாக ஈடுபட்டு

அபி – இருந்தும்

ந – இல்லை

ஏவ – நிச்சியமாக

கிஞ்சித் – ஏதும்

கரோதி – செய்வது

ஸ – அவன்

மொழிபெயர்ப்பு

         தனது செயல்களின் பலன்களின் மீதான எல்லாப் பற்றுதலையும் துறந்து, எப்போதும் திருப்தியுற்று சுதந்திரமாக விளங்கும் அவன், எல்லாவிதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் எந்தச்[பலன் நோக்குச்   ] செயலையும் செய்வதில்லை.

பொருளுரை

ஒருவன் எல்லாவற்றையும் கிருஷ்ணருக்காக கிருஷ்ண உணர்வில் செய்யும்போது மட்டுமே செயல்கலளின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவது சாத்தியமாகும். கிருஷ்ண பக்தன் பரம புருஷ பகவானிடமுள்ள தூய அன்பில்   செயல்படுவதால்,                   செயலின் பலன்களில் அவனுக்கு எவ்வித கவர்ச்சியும் இல்லை. அனைத்தையும் கிருஷ்ணரிடம் ஒப்படைத்துவிட்டால், அவன் தனது சுய பராமரிப்பையும் பொருட்படுத்துவதில்லை.மேலும்,    சொத்துக்களைச் சேர்ப்பதற்கோ ஏற்கனவே தன்னிடம் உள்ள சொத்துக்களைப் பாதுகாப்பதற்கோ அவன் கவலைப்படுவதில்லை. தன் கடமையை தன்னால் இயன்றவரை திறமையாகச் செய்துவிட்டு அனைத்தையும் கிருஷ்ணரிடம் விட்டுவிடுகின்றாண். இத்தகு பற்றற்ற மனிதன் நல்ல, தீய விளைவுகளிலிருந்து எப்போதும் விடுபடுட்டுள்ளான். எனவே அவன் எதையும் செய்யாதது போலவேயகிறது. இதுவே அகர்மா அல்லது பலன் விளைவுகளற்ற செயல் என்பதன் அறிகுறியாகும். எனவே கிருஷ்ண உணர்வின் செயலைத் தவிர மற்ற செயல்கள் அனைத்தும், செய்பவனை பந்தப்படுத்துவதால்  அவை விகர்மா எனப்படும்

Thursday, November 4, 2010

தீபாவளி திருநாள்

 

 

diwali

நாளை தீபாவளி திருநாள். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது, பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் "பவுமன்' என்ற மகனைப் பெற்றாள் பூமாதேவி. அவன் சிறப்பாக தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான். பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்த சக்தியால் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என அவன் வரம் பெற்றான். Photo-0258

ஆண்டுகள் கடந்தன. நரகாசுரன் தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பூலோகத்தினரை மட்டுமல்ல, தேவர்களையும் கொடுமை செய்தான்.நரகர் எனப்படும் மனிதர்களுக்கு எதிரானவன் என்பதால் "நரகாசுரன்' என்று பெயர் பெற்றான். கலவரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பெற்ற பிள்ளையென்றும் பாராமல், மகனை அழிக்க முடிவெடுத்தார் விஷ்ணு. அந்தப் பிறவியில் விஷ்ணு கிருஷ்ணனாகவும், பூமாதேவி, சத்யபாமாவாகவும் பூலோகத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு நரகாசுரன் தான் தன் மகன் என்ற விபரம் பிறவி மாறிவிட்டதால் மறந்து விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அவளை தேரோட்டச் சொல்லி, நரகாசுரனை அழிக்க கிளம்பினார். இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் மயங்கி விழுவது போல நடித்தார். தன் கணவரை காப்பாற்ற வேண்டுமென்ற ஆதங்கத்தில், சத்யபாமா நரகாசுரன் மீது அம்பெய்தாள். அவன் இறந்து போனான். அதன்பிறகே அவன் தன் மகன் என தெரிய வந்தது.

நரகாசுரன் இறந்ததும் மக்கள் ஆனந்தமாக வீடுகளில் தீபமேற்றுவதை சத்யபாமா கவனித்தாள். தன் கணவரிடம், ""என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் இவனது மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய் குளியல், என் மகன் இறப்பைப் பொறுத்தவரை புனிதமாக்கப் பட வேண்டும். அன்று கங்காதேவி, ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். எண்ணெயில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும்,'' என வேண்டினாள். பெருமாளும் அவ்வாறே வரமளித்தார். இரக்கம் மிக்க பூமாதேவி, அதிகாலை குளிரில் மக்கள் நடுங்கக்கூடாது என்பதற்காக வெந்நீரில் குளிக்கவும் அனுமதி பெற்றுத் தந்தாள்.

சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை முன்னதாக (48 நிமிடம்) குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. நாளை அமாவாசையும் வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.

குளிக்கும் முறை: நல்லெண்ணெயில் இஞ்சித்துண்டு, பூண்டு சில பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம், விரலிமஞ்சள் துண்டு, சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறியதும், வீட்டில் பெரியவர், சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும். குளிப்பவருக்கு ஒருவர் தண்ணீர் எடுத்துக் கொடுக்க அதை அவர் வாங்கிக் குளிக்க வேண்டும். குளியலுக்குப் பின் தீபாவளி பூஜையை முடித்து, சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்பே புத்தாடை அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது சாஸ்திரப்படி உகந்ததல்ல.

 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp