Saturday, January 8, 2011

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-5 பாதம் –29

Count: vist:

clip_image001

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 5

பாதம் – 29

போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஷ்வரம்

ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் ஜ்ஞாத்வா மாம் ஷாந்திம்ருச்சதி

போக்தாரம் -அனுபவிப்பன்

யஜ்ஞ – யாகங்கள்

தபஸாம் - தவங்கள்

ஸர்வலோக – எல்லா லோகங்களும் அங்குள்ள தேவர்களும்

மஹா ஈஷ்வரம் – உயர் அதிகாரி

ஸுஹ்ருதம் – உற்ற நண்பன்

ஸர்வ - எல்லா

பூதானாம் - உயிர்வாழிகள்

ஜ்ஞாத்வா – என்று அறிந்து

மாம் – என்னை பகவான் கிருஷ்ணர்

ஷாந்திம் – உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை,

ருச்சதி – அடைகிறான்

மொழிப்பெயர்ப்பு

நானே,  எல்லா யாகங்களையும் தவங்களையும் இருதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும் தேவர்களையும் கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னை பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத் துயரங்களிலிருந்து விடுபட்டு அமைதி அடைகிறான்.

பொருளுரை

மாயச் சக்தியின் பிடியில் சிக்கியுள்ள அனைத்து கட்டுண்ட ஆத்மாக்களும், பௌதிக  உலகில் அமைதியைத் தேடுகின்றனர். ஆனால் பகவத் கீதையின்  இப்பிரிவில் கூறப்பட்டிருக்கும் அமைதிக்கான வழி என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அமைதிக்கான மிகச்சிறந்த வழி என்ன இதுவே, மணிதனின் எல்லா செயல்களையும் அனுபவிப்பவர் பகவான் கிருஷ்ணரே, அவரே எல்லா லோகங்களுக்கும் தேவர்களுக்கும் உரிமையாளர் எனபதால்,மனிதர்கள் அவரது திவ்ய சேவைக்காக அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். அவரைவிட உயர்ந்தவர் எவருமில்லை. தேவர்களில் தலைசிறந்தவர்களான சிவபெருமானையும்  பிரம்மதேவரையும்விட, அவரே சிறந்தவர். வேதங்களில் ( ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 6.7 ) முழுமுதற்க் கடவுள் , தம் ஈஷ்வராணாம் பரமம் மஹேஷ்வரம் என்று வர்ணிக்கப்படுகிறார். மாயைின் மயக்கத்தால், காணும் எல்லாவற்றிற்கும் தானே எஜமானன் என்று ஜீவன்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்கள் இறைவனின் ஜடச் சக்தியால் அளப்படுகின்றனர். பகவானே ஜட இயற்கையின் எஜமானர், கட்டுண்ட ஆத்மாக்களோ ஜடஇற்கையின்  கடுமையான சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இந்த அப்பட்டமான உண்மையினை உணராதவரை, தனிப்பட்ட முறையிலோ பலபேர் ஒன்று கூடியோ, இவ்வுலகில் அமைதியைக் காண்பது சாத்தியம்மில்லை. இதுவே கிருஷ்ண உணர்வில் அறியப்படுவதாகும். பகவான் கிருஷ்ணரே பரம அதிகாரி, மாபெரும் தேவர்கள் உட்பட  எல்லா ஜீவன்களும் அவரது சேவர்களே.பூரண கிருஷ்ண உணர்வில் மட்டுமே பக்கு வமான அமைதியை அடைய இயலும்.

கரம யோகம் என்ற பெயரால் பொதுவாக அறியப்படும்  இந்த ஐந்தாம் அத்தியாயம் கிருஷ்ண உணர்வின் பயிற்சி விவரமாகும். கர்ம யோகம் எவ்வாறு முக்தியளிக்க முடியும் என்ற கற்பனைக் கேள்விக்கு இங்கு பதில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ண உணர்வில் செயலாற்றுவது  என்றால் பகவான் கிருஷ்ணரே ஆளுநர் என்ற முழு ஞானத்துடன் செயலாற்றுவதாகம். இத்தகைய செயல் திவ்ய ஞானத்திலிருந்து வேறுபட்டதல்ல.நேரடியான கிருஷ்ண உணர்வு பக்தி யோகம் எனப்படும் ஞான யோகம் என்பது பக்தி யோகத்திற்கு இட்டுச் செல்லும் பாதையாகும். பரம உண்மையுடனான ஒருவது உறவைப் பற்றிய முழு ஞானத்துடன் செயல்படுவதே கிருஷ்ண உணர்வாகும். மேலும், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரைப் பற்றிய முழு ஞானமே அந்த உணரவின் பக்குவ நிலையாகும். கடவுளின் மிகச்சிறிய அம்சமான ஆத்மா, அவரது நித்தியத் தொண்டனாவான். ஆத்மா மாயையை ஆட்சி செய்ய விரும்பும்போது, அதனுடன் அவன் தொடர்பு கொள்கிறான். இதுவே அவனது பல்வேறு துயரங்களுக்குக் காரணம். அவன் ஜடத்துடன் தொடர்பு கொண்டுள்ளவரை,அதன் தேவைகளுக்காகச் செலாற்றுதல் அவசியம். இருப்பினும், ஜடத்தின் எல்லைக்குள் இருக்கும்போதிலும், கிருஷ்ண உணர்வானது ஒருவனை ஆன்மீக வாழ்விற்குக் கொண்டு வருகிறது. ஏனெனில், ஜடவுலகில் பயிற்சி செய்யப்படும்போதிலும் ஆன்மீக வாழ்வினை இஃது எழுச்சி பெறச் செய்கின்றது. ஒருவன் எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளானோ, அந்த அளவிற்கு அவன் ஜடத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்டுள்ளான். கடவுள்   யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை. கிருஷ்ண உணர்வில் அவன் செய்யும் கடமைகளைப் பொறுத்ததே அவனது பலன்கள். அக்கடமைகள் புலன்களை அடக்குவதற்க்கும், கோபம், ஆசை ஆகியவற்றின் தாக்குதலை வெல்வதற்க்கும் உதவியாக அமைகின்றன. மேற்க்கூறிய எழுச்சிகளை அடக்கி, கிருஷ்ண உணர்வில்  நிலையாக நிற்பவன், உண்மையில் ப்ரஹ்ம நிர்வாண எனும் திவ்யாமான நிலையில் உள்ளான். கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்யும் போது, தானாகவே அஷடாங்க யோக முறையும் பயிற்சி செய்யப்படுகிறது; அடையப்படுகின்றது. அஷ்டாங்க யோக முறையில் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரணாத்யான, ஸமாதி என்னும் படிப்படியான வழியில் முன்னேற்றம் அடையப்படுகிறது. ஆனால் பக்தித் தொண்டின் பக்குவத்துடன் ஒப்பிடும்போது, இவை ஒரு முன்னுரையைப் போன்றவை. பக்தித் தொண்டு மட்டுமே மனிதனுக்கு அமைதியை நல்கும். பக்தியே வாழ்வின்  மிக உன்னதமான பக்குவநிலையாகும்.

 

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

1 comment:

  1. மிகவும் சிறப்பாக அளித்தமைக்கு நன்றி

    ReplyDelete

 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp