Friday, December 31, 2010

Download Desktop Wallpaper Jan -2011

for downloading click the Image.

Happy New Year 2011

Nights are Dark but Days are Light,
Wish your Life will always be Bright.
So my Dear don't get Fear Coz,

God Gift us a "BRAND NEW YEAR"

clip_image001

Ten Great Tips For 2011


1. Stay out of Trouble.

2. Aim for Greater Heights.
3. Stay Focused on your Job.
4. Exercise to Maintain Good Health.
5. Practice Team Work.
6. Rely on your Trusted Partner to Watch your Back. Take your Time Trusting Others.
7. Save for Rainy Days.
8. Rest and Relax.
9. Always Take Time to Smile.
AND
10. Realize That Nothing is Impossible.

Sunday, December 19, 2010

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-5 பாதம் –22

 

 

clip_image001

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 5

பாதம் – 22

யே ஹி ஸம்ஸ்பர்ஷஜா போகா து:கயோநய ஏவ தே।
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:

யே – அவர்கள்

ஹி – நிச்சியமாக

ஸம்ஸ்பர்ஷஜா – ஜடப்புலன்களின் தொடர்பினால்

போகா –இன்பம்

துக – துன்பம்

யோனய – மூலமான

ஏவ – நிச்சியமாக

தே – அவை

ஆதி – முதல்

அந்த – முடிவு

வந்த – உட்பட்டவை

கௌந்தேய – குந்தியின் மகனே

ந – என்றுமில்லை

தேஷீ – அவற்றில்

ரமதே – மகிழ்வடைவது

புத – புத்தியுடையோர்

மொழிபெயர்ப்பு

ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இந்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.

பொருளுரை

பௌதி்க புலன்களில் தொடர்பால் உண்டாகும் பௌதிக புலனின்பங்கள், தற்காலிகமானதாகும், ஏனெனில், உடலே தற்காலிகமானதுதானே. முத்தி பெற்ற ஆத்மா நிலையற்ற எதிலும் ஆர்வம் கொள்வதில்லை. திவ்யமான ஆனந்தத்தின் மகிழ்ச்சியினை நன்றாக அறிந்துள்ள முக்தி பெற்ற ஆத்மா, பொய்யான இன்பத்தைத் துய்ப்பதற்கு எவ்வாறு சம்மதிக்க முடியும்? பத்ம புரணத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது.

Tuesday, November 23, 2010

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-4 பாதம் –22

clip_image001

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 4

பாதம் – 22

த்யக்த்வா கர்ம பலாஸங்கம் நித்ய த்ருப்தோ நிராஷ்ரய

கர்மண் யபிப்வ்ருத்தோ அபி நைவ கிஞ்சித் கரோதிஸ

த்யக்த்வா – துறந்து

கர்மபலஆஸங்கம்- பலன்களின் மீதான பற்றை

நித்ய –எப்போதும்

த்ருப்த – திருப்தியுற்று

நிராஷ்ரய – எதையும் சாராமல்

கர்மணி – செயலில்

அபிப்ரவ்ருத்த – முழுமையாக ஈடுபட்டு

அபி – இருந்தும்

ந – இல்லை

ஏவ – நிச்சியமாக

கிஞ்சித் – ஏதும்

கரோதி – செய்வது

ஸ – அவன்

மொழிபெயர்ப்பு

         தனது செயல்களின் பலன்களின் மீதான எல்லாப் பற்றுதலையும் துறந்து, எப்போதும் திருப்தியுற்று சுதந்திரமாக விளங்கும் அவன், எல்லாவிதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் எந்தச்[பலன் நோக்குச்   ] செயலையும் செய்வதில்லை.

பொருளுரை

ஒருவன் எல்லாவற்றையும் கிருஷ்ணருக்காக கிருஷ்ண உணர்வில் செய்யும்போது மட்டுமே செயல்கலளின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறுவது சாத்தியமாகும். கிருஷ்ண பக்தன் பரம புருஷ பகவானிடமுள்ள தூய அன்பில்   செயல்படுவதால்,                   செயலின் பலன்களில் அவனுக்கு எவ்வித கவர்ச்சியும் இல்லை. அனைத்தையும் கிருஷ்ணரிடம் ஒப்படைத்துவிட்டால், அவன் தனது சுய பராமரிப்பையும் பொருட்படுத்துவதில்லை.மேலும்,    சொத்துக்களைச் சேர்ப்பதற்கோ ஏற்கனவே தன்னிடம் உள்ள சொத்துக்களைப் பாதுகாப்பதற்கோ அவன் கவலைப்படுவதில்லை. தன் கடமையை தன்னால் இயன்றவரை திறமையாகச் செய்துவிட்டு அனைத்தையும் கிருஷ்ணரிடம் விட்டுவிடுகின்றாண். இத்தகு பற்றற்ற மனிதன் நல்ல, தீய விளைவுகளிலிருந்து எப்போதும் விடுபடுட்டுள்ளான். எனவே அவன் எதையும் செய்யாதது போலவேயகிறது. இதுவே அகர்மா அல்லது பலன் விளைவுகளற்ற செயல் என்பதன் அறிகுறியாகும். எனவே கிருஷ்ண உணர்வின் செயலைத் தவிர மற்ற செயல்கள் அனைத்தும், செய்பவனை பந்தப்படுத்துவதால்  அவை விகர்மா எனப்படும்

Thursday, November 4, 2010

தீபாவளி திருநாள்

 

 

diwali

நாளை தீபாவளி திருநாள். பாதாள லோகத்தில் வசித்த மது, கைடபர் என்னும் அரக்கர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வேதங்களை மீட்க பகவான் விஷ்ணு பாதாளம் நோக்கிச் சென்றார். அப்போது, பூமாதேவியுடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் "பவுமன்' என்ற மகனைப் பெற்றாள் பூமாதேவி. அவன் சிறப்பாக தவம் செய்து பிரம்மாவிடம் சாகாவரம் கேட்டான். பூமியில் இறந்தவர்கள் மடிந்தேயாக வேண்டும் என்ற பிரம்மா, அவன் பல லட்சம் ஆண்டுகள் வாழ வரம் தந்ததோடு, எந்த சக்தியால் அவனுக்கு அழிவு வரவேண்டும் எனக் கேட்டார். தன்னைப் பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என அவன் வரம் பெற்றான். Photo-0258

ஆண்டுகள் கடந்தன. நரகாசுரன் தான் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பூலோகத்தினரை மட்டுமல்ல, தேவர்களையும் கொடுமை செய்தான்.நரகர் எனப்படும் மனிதர்களுக்கு எதிரானவன் என்பதால் "நரகாசுரன்' என்று பெயர் பெற்றான். கலவரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பெற்ற பிள்ளையென்றும் பாராமல், மகனை அழிக்க முடிவெடுத்தார் விஷ்ணு. அந்தப் பிறவியில் விஷ்ணு கிருஷ்ணனாகவும், பூமாதேவி, சத்யபாமாவாகவும் பூலோகத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டனர். சத்யபாமா தேரோட்டுவதில் வல்லவள். அவளுக்கு நரகாசுரன் தான் தன் மகன் என்ற விபரம் பிறவி மாறிவிட்டதால் மறந்து விட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அவளை தேரோட்டச் சொல்லி, நரகாசுரனை அழிக்க கிளம்பினார். இருவருக்கும் கடும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் மயங்கி விழுவது போல நடித்தார். தன் கணவரை காப்பாற்ற வேண்டுமென்ற ஆதங்கத்தில், சத்யபாமா நரகாசுரன் மீது அம்பெய்தாள். அவன் இறந்து போனான். அதன்பிறகே அவன் தன் மகன் என தெரிய வந்தது.

நரகாசுரன் இறந்ததும் மக்கள் ஆனந்தமாக வீடுகளில் தீபமேற்றுவதை சத்யபாமா கவனித்தாள். தன் கணவரிடம், ""என் மகன் தீயவன் என்பதால் மக்கள் அவனது மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உலகில் இவனைப் போல ஒரு பிள்ளை பிறக்கக்கூடாது என்பதை எதிர்கால உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் இவனது மரணத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்த பிறகு செய்யும் எண்ணெய் குளியல், என் மகன் இறப்பைப் பொறுத்தவரை புனிதமாக்கப் பட வேண்டும். அன்று கங்காதேவி, ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் எழுந்தருள வேண்டும். எண்ணெயில் லட்சுமி வாசம் செய்ய வேண்டும்,'' என வேண்டினாள். பெருமாளும் அவ்வாறே வரமளித்தார். இரக்கம் மிக்க பூமாதேவி, அதிகாலை குளிரில் மக்கள் நடுங்கக்கூடாது என்பதற்காக வெந்நீரில் குளிக்கவும் அனுமதி பெற்றுத் தந்தாள்.

சூரிய உதயத்துக்கு முன்னதாக இரண்டு நாழிகை முன்னதாக (48 நிமிடம்) குளிப்பது மிகவும் சிறப்பானது. காலை 5.30க்குள் எண்ணெய் குளியலை முடித்து விட வேண்டும். ஆனால், நாலரை மணிக்கு முன்னதாக குளிக்கக்கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு வழக்கமான குளியலையும் குளிக்க வேண்டும் என்பதும் நியதி. நாளை அமாவாசையும் வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்தக்கரைகளில் தர்ப்பணம் செய்தால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும்.

குளிக்கும் முறை: நல்லெண்ணெயில் இஞ்சித்துண்டு, பூண்டு சில பற்கள், மிளகு இரண்டு, சிறிய வெங்காயம், விரலிமஞ்சள் துண்டு, சீரகம் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் ஆறியதும், வீட்டில் பெரியவர், சிறியவர்களுக்கு எண்ணெய் தேய்த்து விட வேண்டும். குளிப்பவருக்கு ஒருவர் தண்ணீர் எடுத்துக் கொடுக்க அதை அவர் வாங்கிக் குளிக்க வேண்டும். குளியலுக்குப் பின் தீபாவளி பூஜையை முடித்து, சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்பே புத்தாடை அணிய வேண்டும். வெறும் வயிற்றில் புத்தாடை அணிவது சாஸ்திரப்படி உகந்ததல்ல.

Thursday, October 28, 2010

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-14 பாதம் –16

clip_image001

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 14

பாதம் – 16

கா்மண ஸூக்ருதஸ்யாஹு ஸாத்த்விகம் நிர்மலம் ஃபலம்

ரஜஸஸ்து ஃபலம் து கம் அஜ்ஞானம் தமஸ ஃபலம்

கா்மண :– செயலின்  ;  ஸுக்ருதஸ்ய – சத்துவ குணத்தில் ; ஆஹீ :– கூறப்படுகின்றது;  ஸாத்த்விகம் – சத்துவகுணம் ; நிர்மலம் – தூய்மைப்படுத்தப்பட்ட ; ஃபலம் – விளைவு  ;

ரஜோ குணத்தின்;து – ஆனால் ; ஃபலம்  - விளைவு;  துகம்  - துக்கம் ;அஜ்ஞானம் – பொருளற்ற; தமஸ; – தமோ குணத்தின்; ஃபலம் – விளைவு,

மொழிபெயர்ப்பு

         சத்துவ குணத்தில் செயற்படுவதால் ஒருவன் தூய்மைப்படுகிறான். ரஜோ குணத்தில் செய்யப்பட்ட செயல்கள்  துக்கத்திலும், தாமோ குணத்தில் செய்யப்பட்ட செயல்கள் அறிவிலித்தனத்திலும் விளைவுறுகின்றன.

பொருளுரை

     சத்துவ குணத்திலான நற்செயல்களால் ஒருவன் தூய்மைப்படுத்தப்படுகின்றான், எனவே மயக்கத்தினின்றும் விடுபட்டவா்களான முனிவா்கள் மகிழ்சியில் நிலைபெற்றிருக்கின்றனா். அது போலவே ரஜோ குணத்திலான செயல்கள் வெறுமே துக்ககாரமானவை. ஜட சுகத்திற்கான எந்தச் செயலும் நிச்சியமாகத் தோற்கடிக்கப்படும்.  உதாரணமாக, ஒருவனுக்கு வான் சுரண்டிக் கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு பெருமளவில் மனித சமூகம் துயரப்பட்டிருக்க வேண்டும். பொருள் வழங்குபவா் பெருமளவு செல்வத்தைச் சோ்க்க மிகக் கடினப்பட்டிருக்க வேண்டும். கட்டிடத்தை உருவாக்க அடிமைப்பட்டிருக்கும் மனிதா்கள் உடலால் மிகவும்  பாடுபடவும் வேண்டும். இந்த துக்கங்கள் இருக்கின்றன.  ரஜோ குணத்தின் மயக்கத்தின் கீழ் ஆற்றப்படும் எந்தச் செயலிலும் நிச்சயமாகப் பெரும் துக்கம் இருக்கின்றது என்று பகவத்கீதை கூறுகின்றது. மிகச் சிறிய, பெயரளவு மனச் சுகம் வேண்டுமானால் இருக்கலாம் –எனக்கு இந்த வீடு இருக்கின்றது, பணம் இருக்கின்றது--- ஆனால்  இது   உண்மையில் மகிழ்ச்சியல்ல.

clip_image001[6]

தாமோ குணத்தைப் பொபறுத்தவரை செயலாற்றுபவன் ஞானமற்றவனாயிருக்கிறான். எனவே அவனது செயல்கள்  எல்லாம் தற்காலத் துக்கத்தில் விளைவுறுகின்றன. பிறகு அவன் மிருக வாழ்க்கையை நோக்கிச் செல்லுகின்றான்.மயக்கச் சக்தியான மாயையின் தந்திரத்தால் மிருகங்கள் புரிந்து கொள்ளா விடினும் கூட மிருக வாழ்வு மிகவும் துக்ககரமானதே. வாயற்ற பிராணிகளைக் கொல்லுவதும் தாமோகுணத்தின் காரணத்தாலேயே. இந்த மிருகக் கொலையாளிகள் எதிர்காலத்தில் தங்களைக் கொல்லுவதற்தகுத்தக்கதான உடலை மிருகம் பெறப்போகின்றது என்பதை அறியார்கள். இதுவே இயற்கையின் சட்டம். மனித சமூகத்தில் ஒருவன் ஒரு மனிதனைக் கொன்றால் தூக்குண்டு மரணப்படுகிறான். இது தேசத்தின் சட்டம். அறியாமையின்  காரணத்தால், பரம புருஷனால் ஆளப்படும் ஒரு முழு தேசம் இருப்பதை மக்கள் காண்பகதில்லை. ஒவ்வொரு உயிர்வாழியும் முழுமுதற் கடவுளின் மைந்தனே,ஒரு சிறு எறும்பு கொல்லப்படுவதைக்கூட அவர் பொருத்துக்கொள்வதில்லை. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். எனவே, நாக்கின் சுவைக்காக மிருகங்களைக் கொல்லுதல் மிகவும்  கீழ்த்தரமான அறியாமையாகும். இறைவன் பற்பல அருமையான பொருள்களை வழங்கியிருப்பதால், மிருகங்களைக் கொல்வதற்கான தேவை மனிதர்களுக்கு கிடையாது. இருந்தும், ஒருவன் மாமிச உணவு உண்பதில் ஈடுபட்டால், அவன் அறியாமையில் செயல்படுகிறான் என்பது, மிகவும் இருண்ட எதிர்காலத்தை உருவாக்கிக்கொண்டுள்ளான் என்பதும் புரி்ந்து கொள்ளப்பட வேண்டும். மிருகவதையின் பற்பல வகைகளில், பசுவைக் கொல்வது மிகவும் கொடூரமானது; ஏனெனில், பாலை வழங்கும் பசு நமக்கு எல்லாவித இன்பத்தையும் கொடுக்கின்றது. பசுவதை என்பது மிகமிக கீழ்த்தரமான அறியாமையாகும். வேத இலக்கியத்தில் ( ரிக் வேதம் 9.46.4), கோ பி ப்ரீணித – மத்ஸரம் என்றும் கூறப்பட்டுள்ளது; அதாவது, பாலால் பூரண திருப்தியடைந்த மனிதன், பசுவைக் கொல்ல விரும்பினால் அது மிகவும் கொடூரமான அறியாமையாகும். வேத இலக்கியத்தில் பின்வருமாறு ஒரு பிரார்த்தனையும் இருக்கின்றது.

              நமோ ப்ரஹ்மண்ய-தேவாய    கோ – ப்ராஹ்மண்ய-ஹிதாய ச

ஜகத்திதாய க்ருஷ்ணாய  கோவிந்தாய நமோ நம:

sacred-cow_thumb[1]

“எம்பெருமானே, பசுக்களுக்கும் பிராமணர்களுக்கும் நலன்விரும்பி நீரே, மேலும், மொத்த மனித சமுதாயம் மற்றும் உலகத்தின்  நலன்விரும்பியும் தாங்களே.”( விஷ்ணு புராணம் 1.19.65) இதன் பொருள் என்னவெனில், பசுக்கள் மற்றும் அந்தணர்கள் ஆன்மீகக் கல்வியின் சின்னம்,பசுக்களோ மிகவும் மதிப்புள்ள உணவின் சின்னம்; இவ்விரு உயிர்வாழிகளும், அதாவது, பிராமணர்களும் பசுக்களும் எல்லாவித பாதுகாப்பும் கொடுக்கப்பட வேண்டியவர்கள் –அதுவே உண்மையான நாகரிக வளர்ச்சி. நவீன மனித சமுதாயத்தில், ஆன்மீக ஞானம் அலட்சியபடுத்தபட்டு பசுவதை ஊக்குவிக்கப்படுகின்றது. இதனால், மனித சமுதாயம் தவறான பாதையில் முன்னேறிக் கொண்டு, தனது சுய அழிவிற்கான வழியைக் கண்டுக்கொண்டு இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு நாகரிகம் தங்களது குடிமக்களை அடுத்த பிறவிகளில்  மிருகங்களாக ஆகுமாறு வழிநடத்துகின்றதோ, அது நிச்சயமாக மனித நாகரிகம் அல்ல. தற்கால மனித நாகரிகம், ரஜோ குணத்தினாலும் தமோ குணத்தினாலும் அபாயகரமாக வழிதவறி நடத்தப்படுகின்றது என்பது உண்மையே. இது மிகவும் பயங்கரமான காலமாகும்.மனி்த வர்க்கத்தை மாபெரும் அபாயத்திலிருந்து காப்பதற்காக, மிகவும் எளிய வழிமுறையான கிருஷ்ண உணர்வினை எல்லா நாடுகளும் கவனத்துடன் வழங்க முன்வர வேண்டும்.

Monday, October 4, 2010

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-3 பாதம் –40

image 

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 3

பாதம் -40

இந்த்ரியாணி மனோ புத்திரஸ்யாதிஷ்சடானமுச்யதே ஏதைர்விமோஹயத்யேஷ ஞானமாவ்ருத்ய தேஹினம்

இந்த்ரியாணி – புலன்கள்

மன:– மனம்; 

புத்தி: – புத்தி: 

அஸ்ய:– காமத்தின்;

அதிஷ்டானம்: – இருப்பிடம்; 

உச்யதே: –அழைக்கப்படுகின்றன;

ஏதை: – இவைகளாலெல்லாம்;

விமோஹயதி:– மயக்குகின்றன;

ஏஷ: – இதன்:

ஞானம்: – அறிவு;

ஆவ்ருத்ய:– மூடப்படுகின்றது

தேஹினம்: – உடலுடையோன்:

மொழிபெயர்ப்பு

புலன்கள்,மனம், புத்தி இவையே ஜுவனின் உண்மையறிவை மறைத்து அவனை மயக்கும் இந்தக் காமத்தின் பாசறைகளாகும்.

பொருளுரை

        கட்டுண்ட ஆத்மாவின் உடலில் மிக முக்கியமான போர் முனைகளை எதிரி கைப்பற்றியிருக்கிறான். எனவே எதிரியை வெல்ல விரும்பும் ஒருவன் அவனைக்  கண்டு கொள்ளும்படி இந்த இடங்களைச் சுட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ கிருஷ்ணா். புலன்களின் எல்லாச் செயல்களுக்கும் மனமே மையமாகும். எனவே புலன் நுகா்வின் எண்ணங்களெல்லாவற்றின் களஞ்சியம் மனமே. இதனால்தான், மனமும் ,புலன்களும் காமத்தின் பண்டகசாலைகளாகி விடுகின்றன, அடுத்த படியாக புத்திப் பிரிவு இத்தகு காமத்திறன்களின் தலைநகரமாகின்றது. ஆன்மாவிற்கு மிக நெருங்கிய அண்டை வீட்டான் புத்தியே. காமப்புத்தியானது, வீண் அகங்காரத்தை மேற்கொண்டு தன்னை ஜடத்துடன் – இவ்வாறாக மனம், புலன்கள் இவற்றுடன் – ஒன்றித்து நோக்குமாறு ஆத்மாவை வசீகரிக்கிறது. ஜடப் புலன்களைத் துய்ப்பதற்கு அடிமையாகி, இதை உண்மை இன்பமாக எண்ணிக் கொண்டு விடுகிறது ஆத்மா. ஸ்ரீமத் பாகவதத்திலே, ஆத்மாவின் இந்த தப்புணர்வு அழகாக விளக்கப்படுகிறது.

   “ யஸ்யாத்மபுத்தி: குணாபே த்ரிதாதுகே

ஸ்வதி: களத்ராதீசு பௌம இஜ்யதீ:

யத்தீர்த்த புத்தி:ஸலிலே ந கா்ஹிசி

ஜனேஸ்வபிக்ஞேஷீ ஸ ஏவ கோகர,:

     “மும்மூலங்களாலான உடலை, தானென்றும், இவ்வுடலினால் உற்பத்தியாகும் பிற உடல்களை, உறவென்றும், இவ்வுடல் பிறந்த நிலத்தை வந்தனைக்குரியதாகவும் எண்ணுபவனும், புண்ணியத் தலங்களுக்கு (ஆங்கே உன்னத ஞானமுடையோரைச் சந்திப்பதற்  காயன்றி ) வெறுமே குளிப்பதற்காகச் செல்பவனும் காகம் அல்லது கழுதையாகக் கருதப்பட வேண்டியவனே”.

                               

Saturday, October 2, 2010

Indian Temples Abroad !!!


 

clip_image001
Lord Venkateshwara Temple , Birmingham , United Kingdom


clip_image002

Malibu Hindu Temple , Malibu , California , US
clip_image003

Shiva-Vishnu Temple , Livermore , California , US
clip_image004

Lord Vishnu Temple , Angkor , Cambodia
The largest temple of the world, raised during the reign of Suryavarman- II in 12th century, is, in fact, located in Angkor, a major archaeological site of Cambodia . It is dedicated to Lord Vishnu. It is also one of the two temples intact in Angkor , Cambodia . The other is a Buddhist Temple . The largest temple of Lord Vishnu in Angkor is built according to Khmer architecture, original to Cambodia.

clip_image005

Prambanan Shiva Temple , Central Java , Indonesia

clip_image006

Sri Venkateswara Swami Temple of Greater Chicago - Aurora , Illinois , United States
clip_image007

BAPS Shri Swaminarayan Mandir - Toronto , Canada
clip_image008

Sri Siva Vishnu Temple , Washington DC , United States
clip_image009

BAPS Shri Swaminarayan Mandir, London ( Neasden Temple ), United States
clip_image010

Sri Murugan Temple Batu Caves , Penang , Malaysia
clip_image011

Sri Venkateswara Temple , Bridgewater , NJ , US
clip_image012

Mother Temple of Besakih, Bali , Indonesia
clip_image013

Murugan Temple , Sydney , Australia
clip_image014

Venkateswara Swami temple , Riverdale near Atlanta , Georgia , US
clip_image015

Sri Venkateswara Swami Temple , Helensburgh, Sydney , Australia
clip_image016

Velmurugan Gnana Muneeswarar Temple , Rivervale Crescent Sengkang , Singapore
clip_image017

Sri Meenakshi Devasthanam - Pearland , Texas , US
clip_image018

Ekta Mandir, Irving , Texas , US
clip_image019

Sri Venkateshwara Temple - New Jersey , US
clip_image020

Sri Lakshmi Temple - Ashland , MA , US
clip_image021

Sri Venkateswara Swami Temple , Pittsburgh , US
clip_image022

Shiva Vishnu Temple of South Florida Inc, FL, US
clip_image023

Shiva - Vishnu Temple of Melbourne , Melbourne , Australia
clip_image024

Sri Murugan Temple , London , UK
clip_image025

Quad City Hindu Temple , Rock Island , IL , US
clip_image026

Sri Prasanna Venkateswara Swami Temple , Memphis , Tennessee , US
clip_image027

Sri Srinivasa Perumal Temple or Sri Perumal Temple , Little India , Serangoon Road, Singapore

clip_image028
Arulmigu Sri Raja Kaliamman Temple , Johor Baru , Malaysia - The only Hindu Glass Temple abroad.

 


 


Saturday, September 4, 2010

விநாயகர் சதுர்த்தி - 11.09.2010 - சனிக் கிழமை

விநாயகர் சதுர்த்தி - 11.09.2010 - சனிக் கிழமை

ஸ்ரீ விநாயக மூர்த்தி : 

அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயvarasidhi sakthi vinayakarகப் பெருமான்.மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும்.

பிள்ளையார் சுழி :

எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார். ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் - O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் - இணைந்து "உ" எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

பிள்ளையார் குட்டிக்கொள்ளுதலும், தோப்புக் கரணமும்

எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. புராண காலத்தில் ஒரு சமயம் அகத்தியர் பொதிகை மலை வந்து, தவத்திலிருக்க, உலக நன்மைக்காக விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தை உருட்ட, அந்தக் கமண்டலத்திலிருக்கும் நீர் பெருக்காக எடுத்து காவிரி ஆறாக பிரவாகித்தது. தவம் நீங்கிய அகத்தியர், கமண்டலத்தை உருட்டிய காகத்தைக்காண, அது ஒரு சிறுவன் வடிவாக நிற்க, கோபத்தில் அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்டினார். அதன் பின், கோபம் மறைந்து தனது ஞானக் கண் திறக்க அங்கே ஸ்ரீ விநாயகர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து மன்றாடினார். தலையில் ஒரு முறை குட்டியதற்கு பிராயச்சித்தமாக தனது இரு கைகளாலும் குட்டிக்கொண்டு, நமஸ்காரம் செய்யும் பாவனையில் தனது இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழுந்தார். இச்செய்கையில் மனம் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு பல வரங்கள் தந்து அருளினார். இந்த புராண சம்பவத்தை மையமாகக் கொண்டே பிள்ளையார் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என்பது விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியமானதாகின்றது.

ஸ்ரீ விநாயகரை வலம் வருதல்

அன்னை தந்தையான சிவ பார்வதியை வலம் (சுற்றி) வந்ததாலேயே உலகம் முழுமையும் சுற்றிய பெருமை கிடைத்ததால் ஞானப் பழத்தினை மிக சுலபமாகப் பெற்றவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். அந்த விநாயகரையே வலம் வந்தால், ஞானம் எனும் கல்வியறிவு, பழம் எனும் முயற்சியில் வெற்றி, எளிமையான முறையில் தடங்கல்கள் ஏதுமின்றி, வலம் வரும்போது எண்ணிய காரியம் எல்லாவற்றையும் வெற்றிகரமாக அமைய அருள்பாலிப்பவர் ஆகின்றார்.LordGanesh

ஸ்ரீ கணபதி ஹோமம்

பிள்ளையார் சுழி என்பது எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக அமைந்தது போல, யாகம் எனும் ஹோமம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முதலாக அமைவது ஸ்ரீ கணபதி ஹோமம் ஆகும். ஸ்ரீ கணபதி ஹோமம், நாம் தொடங்கக் கூடிய அனைத்து காரியங்களையும் சுபமாக நிறைவேற்ற வல்லது, வாழ்வில் வசந்தத்தை அளிக்க வல்லது. ஆகையினால் தான் ஒரு புதிய தொழில் தொடங்கும்போதும், கிரஹப்ரவேசம் செய்யும்போதும், அந்த இடத்தில் லாபமும், செல்வமும் அதிகரிக்க கணபதி ஹோமம் செய்யும் வழக்கம் இருக்கின்றது.

ஸ்ரீ விநாயகர் தோற்றம் :

ஸ்ரீ விநாயகரின் தோற்றத்தினை பல விதமான புராணங்கள் பகர்கின்றன.

சிவனும், சக்தியும் ஒரு சமயம் மந்திரசாலா எனும் மண்டபத்திற்கு சென்றார்கள். அங்கு பதிந்திருந்த ஓங்கார வடிவம் சிவன் மற்றும் சக்தியின் பார்வையால் ஓம் எனும் ஓங்காரம் அகரம் மகரம் எனும் இரு பிரிவாகப் பிரிந்தது. அகரம் சிவ வடிவாகவும், மகரம் சக்தி வடிவாகவும் பிரிந்தது. அவ்விரு சக்திகளும் இணைந்து ஒரு புதிய சக்தியை உருவாக்கின. அந்த ஓங்கார பிரணவ வடிவம் தான் ஓங்கார நாயகனாகிய ஸ்ரீ விக்னேஸ்வரர்.

- காஞ்சி புராணம்-

உமையம்பிகையும், சிவபெருமானும் உய்யான வனத்தினில் யானை உருக்கொண்டு காதல் கொண்டனர். அந்தக் காதலின் பரிசாக உருவானர் யானை உருக்கொண்ட ஸ்ரீ கணேசர். (காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் - திருஞான சம்பந்தர்) - சுப்ரபேதம்

உலகமாதாவாகிய உமையம்மைக்கு தாம் கொஞ்சி மகிழ்ந்து விளையாட (பார்வதி ப்ரிய நந்தநாய - விநாயகர் அஷ்டோத்திரம்) மகன் வேண்டும் எனும் எண்ணம் உண்டாயிற்று. அந்தக் குழந்தையும் முழுமையாகத் தாமே உயிர்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மண்ணில் ஒரு குழந்தை வடிவு செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அக்குழந்தையை உமையம்மைக் கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்த சிவபெருமான், அக்குழந்தையைக் காண தேவர்கள் அனைவரையும் அழைத்தார். அக்குழந்தையைக் காண சனீஸ்வர பகவானும் வந்தார். சனி பகவானின் பார்வை பெற்றதால், குழந்தையின் தலை அறுபட்டது. மனம் வெதும்பிய பார்வதியை சமாதானப்படுத்திய சிவபெருமான், தன் சிவகணங்களை எட்டு திசைகளுக்கும் அனுப்பி வடக்கே தலை வைத்து உறங்கும் ஏதேனும் ஒரு உயிரினத்தின் தலையைக் கொண்டு வாருங்கள் எனக் கட்டளை பிறப்பித்தார். அந்த ஆணையை ஏற்ற சிவகணங்கள், ஒரு யானை வடக்கு திசைநோக்கி தலை வைத்து உறங்க அதன் தலையை மட்டும் எடுத்து சிவபெருமானிடம் சேர்த்தனர். சிவபெருமான், யானையின் தலையை உமையம்மையின் குழந்தையின் கழுத்தில் பொருத்தி மறு உயிர்க்கொடுத்தார். அது முதல், அக்குழந்தை மஹா பலம் பொருந்தியவர் ஆனார். அவர், சிவகணங்களுக்கெல்லாம் தலைவனாக, கணாதிபதியாக போற்றி வழிபாடு செய்யப்பட்டார்.- சிவபுராணம்

ஸ்ரீ விநாயகர் புராணம்

விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாகத் தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் −ப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.

lord-shiva-and-pa விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப் பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன.

அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது.

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி வழிபாடு :

பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம்.

மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்துவருகின்றோம்.

ஆலய வழிபாட்டில் அன்றைய தினம் பெருமளவு திரவியங்கள் கொண்டு சிறப்பானதொரு அபிஷேக ஆராதனை நடக்கும்.

விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கும் 21 விதமான பேறுகள் :

1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. செளபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம்,

விநாயகப்பெருமானையே தங்கள் வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது. அகத்திய முனி மூலம் காவிரி தந்தமையும், நம்பியாண்டார் நம்பி மூலம் அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் - மூவர் தேவாரங்களை உலகுக்கு கொடுத்து சைவ சமயத்தையே காப்பாற்றிய பெருமையும், யாவரும் அறிந்ததே.

இன்னும் எண்ணிலடங்காத அற்புதங்களையும் நிகழ்த்திவரும் விநாயகப்பெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் கருணைத் திறன் அளவிடற்கரியது. விநாயகப்பெருமான் திருத்தாள் பணிந்து அவர் அருளாலே அவன் தாள் வணங்கி உய்வோமாக.

*************************************************************

நெய்வேலி ஸத்சங்கம் - மணித்வீபம்,
ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம்
42வது லக்ஷ¡ர்ச்சனை மஹோத்ஸவம்
02.09.2010 முதல் 11.09.2010 வரை

நெய்வேலி, ஸத்சங்கம் - மணித்வீபம் வளாகத்தில், ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
நெய்வேலி நகரத்தின் பழமையான கோயில்களில் ஒன்று ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஆலயம். காஞ்சி மஹா பெரியவரின் அருட்கரங்களில் தவழ்ந்தது இந்த விநாயகர் விக்ரஹம். அவர் கூறிய ஆலோசனைகளின் படியே ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர் ஸ்தாபிதம் செய்யப்பட்டார்.
விநாயகர் ஆலயத்தைத் தாங்கும் நான்கு தூண்களிலும் (ஒவ்வொரு தூணிலும் நான்கு விநாயகர் என) விநாயகரின் பதினாறு வடிவங்கள் (ஷோடச கணபதி) அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த ஆலயமே விநாயக மண்டலமாக அமைந்திருக்கின்றது.
வேதங்கள் காட்டும் வழியாகிய வைதீக முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த ஆலயத்தில் தினந்தோறும் அதிகாலையில் முதல் பூஜையாக "ஸ்ரீ கணபதி ஹோமம்" முதற்கண் செய்யப்பட்டு, அந்த ஹோமத்தில் அமைந்த புனித நீர்க்குடத்திலிருக்கும் தீர்த்தம் கொண்டு ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. அன்பர்கள் பலர், இந்த ஹோமத்தில் பெருமளவு பங்கு கொண்டு, தத்தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
விநாயக வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாகிய விநாயகர் சதுர்த்தி வழிபாடு இவ்வாலயத்தில் இவ்வாண்டு 42ஆவது ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது.
விநாயக சதுர்த்தி மஹோத்ஸவம் பத்து நாட்கள் வழிபாடுகள் நடத்தப்படும்
ஒவ்வொரு நாள் மாலை 06.30மணிக்கு வேதகோஷங்களுடன் அபிஷேகங்கள், அலங்காரம், மிகவும் சிறப்பு வாய்ந்த 'க'கார ஸஹஸ்ரநாம அர்ச்சனை (ஒவ்வொரு நாமாவளியும், வடமொழியின் மூன்றாவது க என்னும் எழுத்தில் மட்டுமே ஆரம்பித்து விநாயகரைப் போற்றுவதாக அமையும்), மஹா தீபாராதனை என்கிற வரிசைப்படி வழிபாடுகள் அமையும்.
விநாயகர் சதுர்த்தி அன்று (11.09.2010 - சனிக்கிழமை) மதியம் 2.00 மணி முதல் மஹந்யாஸ பூர்வக ஏகாதச ருத்ர ஜப பாராயணம், விசேஷ ஸகல திரவிய மஹாபிஷேகம், லக்ஷ¡ர்ச்சனை பூர்த்தி, மஹா தீபாராதனை நடைபெறும்.
பெயருக்கு ஏற்றார் போல, வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்குபவர் வரசித்தி சக்தி விநாயகர். வேண்டும் வரங்களை உடனடியாக சித்திக்க (கிடைக்க) வழிகோலுபவர். அருட்சக்தி நிறைந்தவர்.
இந்த ஆலயத்தில், ஷோடச (16) கணபதிகள் அமைந்த தூண்களுக்கு நடுநாயகமாக அமைந்த ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகரின் அருள் அளவிடமுடியாதது.
தமது பெயருக்கு ஏற்றார்போல, ஸ்ரீ வரசித்தி சக்தி விநாயகர், தன்னை நாடிவரும் அன்பர்களின் வேண்டுகோள்கள் அனைத்தையும் மிக விரைவில் நல்குபவராக, வாஞ்சாகல்ப கணபதியாக - மேலான வரங்களைத் தருபவராக, மிகுந்த சக்தி வாய்ந்தவராக விளங்குகின்றார்.

ஔவையார் இயற்றிய "விநாயகர் அகவல்" (சீதக் களபச் செந்தாமரை..) போல, நக்கீரர் எழுதிய விநாயகர் அகவல் உள்ளது. பதிவின் நீளம் கருதி அதை வெளியிட இயலவில்லை. தேவைப்படுவோர் மின்னஞ்சல் அனுப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜகர்

நெய்வேலி ஸத்சங்கம் - மணித்வீபம் பூஜகர்-

 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp