Sunday, December 18, 2011

சிறந்த 25 பொன்மொழிகள்!

image1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது

அனுப்பியது -மோகன்-ராஜீ

Saturday, November 5, 2011

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

veg_saranjkpசைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:
நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.
மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.
கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:
அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.
எளிதில் ஜீரணம்:
சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.
ஆரோக்கியமான மேனி:
பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.

உடல் எடை:
இறைச்சி உணவை தவிர்ப்பது கொழுப்பு உடலில் சேருவதை குறைக்கும் ஒரு எளிய வழிமுறை. அதற்கு பதிலாக முழு தானிய உணவு,மொச்சை, காய்கறிகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை பருப்புகள் போன்றவற்றை உண்பது உடம்பிலுள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் குறைக்கிறது.
பற்களுக்கு எளிது:
நமது கடைவாய் பற்கள் இறைச்சி துண்டுகளை கடித்து இழுப்பதை காட்டிலும் தானிய உணவுகள், காய்கறிகள் போன்றவற்றை மென்று அரைக்கத்தான் அதிக தோதாக அமைந்துள்ளன. உமிழ் நீருடன்தான் ஜீரண வேலை முதலில் தொடங்குகிறது.இந்த உமிழ் நீர் தாவர வகை கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே ஜீரணிக்க செய்யும் ஆற்றலுடையது.
நோய் தடுப்பு:
மேற்கூறிய சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய், புற்று நோய், சிறுநீரக கோளாறுகள்,ஸ்ட்ரோக் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இவையெல்லாமே சைவ உணவுகளில் மட்டுமே சாத்தியம்.அசைவ உணவு பிரியர்கள் இதனை இழக்கிறார்கள்.

Thursday, November 3, 2011

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-5 பாதம் –12

clip_image001

 

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 5

பாதம் – 12

யுக்த:கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்।
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே

யுக்த – பக்தித் தொண்டில் ஈடுபட்டவன்

கர்மபலம் – எல்லா செயல்களின் பலன்கள்

த்யக்த்வா – துறந்து

ஷாந்திம் – பூரண அமைதி

ஆப்னோதி – அடைகிறான்

நைஷ்டிகீம் – அசைவற்ற

அயுக்த – கிருஷ்ண உணர்வில்  இல்லாதவன்

காமகாரேண – செயலின் பலனை அனுபவிக்க விரும்புவதால்

பலே – பலன்களில்

நிபத்யதே – பந்தப்படுகிறான்

மொழிப்பெயர்ப்பு

பக்தியில் உறுதியாக உள்ள ஆத்மா, எல்லச் செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணிப்பதால்,பூரண அமைதியை அடைகிறான் ஆனால் தெய்வீகத்துடன்   இணையாதவனோ, தனது முயர்சியின் பலனை அனுபவிக்கும் பேராசையால் பந்தப்படுகிறான்./

பொருளுரை

கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கும் உடல் உணர்வில் இருப்பவனுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனி்ல், கிருஷ்ண உணர்வினன் கிருஷ்ணரிடமும்,உடல் உணர்வினன் தனது செயல்களின் பலன்களிலும் பற்றுதல் கொண்டிருப்பதே. கிருஷ்ணரிடம் பற்றுதல்தகொண்டு அவருக்காக செயல்படுபவன், நிச்சயமாக முக்தி அடைந்தவனாவான். அவன் தனது செயல்களின் பலனில் எவ்வித ஏக்கமும் கொள்வதில்லை. இருமையின் உணர்வில் செயல்படுவதே, அதாவது பூரண சக்தியத்தின் ஞானமின்றி செயல்படுவதே, செயலின் பலன்களின் மீதான ஏக்கத்திற்கு காரணம் என்று பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. புருஷோத்தமரான கிருஷ்ணரே பரம பூரண உண்மை. கிருஷ்ண உணர்வில் இருமை கிடையாது. இருப்பவை எல்லாமே கிருஷ்ண சக்தியின் படைப்பே,கிருஷ்ணர் நன்மையின் உருவம். எனவே, கிருஷ்ண உணர்வின் செயல்கள்  பூரண தளத்தில் செயல்படுபவை, திவ்யமான அச்செயல்களுக்கு பௌதிக விளைவுகள் கிடையாது. இதனால் ஒருவன் கிருஷ்ண உணர்வில் அமைதி நிறைந்தவனாக உள்ளான். ஆனால் புலனுகர்ச்சிக்கான இலாபக்கணக்கில் மூழ்கியவன் அந்த அமைதியினைப் பெற முடியாது. கிருஷ்ணருக்குப் புறம்பே எதுவும்மில்லை என்பதே அமைதி மற்றும் அச்சமின்மையின் தளம் – இதனை உணர்வதே கிருஷ்ண உணர்வின் இரசியமாகும்

 

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

Sunday, October 30, 2011

கோவர்த்தன மலை தூக்கி நிற்கும் கோபாலக் கிருஷ்ணன் Govardhana Puja 2011 celebrations at Srila Prabhupada's ISKCON Bangalore

image

பசுக்களையும் பாவையரையும்

பாலகரையும் ஆயர்களையும்

இந்திரனின் கோபத்திலிருந்து

காப்பாற்ற கோவர்த்தன மலை

தூக்கி நிற்கும் கோபாலக் கிருஷ்ணன்!

imageimageimageimageimageimageimageimage

இந்திரனின் கோபத்தால் ஆயர்குலத்தில் மழை கொட்டித் தீர்த்தது.  மக்கள் என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். இடுப்பளவு தண்ணீர் வந்து விட்டதால், பசுக்களைக் காக்க என்ன செய்வதென புரியவில்லை. அவர்கள் கண்ணனிடம் ஓடி வந்தனர்.

கண்ணா! நீ சொன்னதால் தான் இந்திர பூஜையை நிறுத்தி விட்டு, கோவர்த்தன மலைக்கு பூஜை செய்தோம். ஆனால், மேகங்களுக்கு அதிபதியான அவன், எங்கள் மீது கோபம் கொண்டு, இப்படி மழை பெய்யச் செய்துவிட்டானே! நாங்கள் இனி எங்கு போவோம்? வீடுகள் மூழ்கும் நிலைக்கு வந்து விட்டதே, என்றனர்.

அனைவரையும் புறப்படும்படி உத்தரவிட்ட கண்ணன், கோவர்த்தனகிரி அடிவாரத்திற்கு வந்தான். மலையை  தன் சுண்டு விரலால் தூக்கினான். அனை வரையும் மலைக்கு கீழ் செல்லும்படி கூறினான். இப்போது சொட்டு மழை கூட யார் மீதும் படவில்லை. மலை மேல் பெய்த மழைநீர், வெவ்வேறு திசைகளில் ஓடியது. எல்லாரும் கண்ணனைப் பாராட்டினர். மலையடிவாரத்தில் தற்காலிக கூடாராங்கள் அமைத்து தங்கிய மக்கள், வழக்கம் போல் பால் கறப்பது, தயிர் கடைவது, வெண்ணெய் எடுப்பது என அன்றாட வேலைகளில் மூழ்கிவிட்டனர்.

இந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. கோவர்த்தன மலையை தூக்கி வைத்திருந்த கண்ணனிடம் ஓடிவந்தான். கண்ணா! என்னை மன்னித்து விடு. ஆண்டுதோறும், எனக்கே இந்த மக்கள் விழா எடுப்பார்கள். அதன் காரணமாக காலாகாலத்திற்கும் தேவையான மழையை நானே தந்து கொண்டிருந்தேன். புல், பூண்டுகள் ஏராளாமாய் கிடைத்ததால், இங்கிருக்கும் பசுக்கள் துன்பப்பட்டதே இல்லை. இருப்பினும், நீ இருக்கும் இடத்தில் என் பெருமையை காட்டிக் கொள்வதற்காக, இப்படி மழை பெய்யச் செய்தது தவறு தான். மழை நின்று விட்டது. மக்கள் அவரவர் இடங்களுக்குச் செல்லலாம். பசுக்களை பாதுகாத்ததால், உன்னை உலகத்தார் கோவிந்தன் என்று அழைப்பர், எனச் சொன்னான்.

கண்ணன் இந்திரனிடம், இந்திரா! நீ மேகங்களின் அதிபதியாக இருக்கலாம். அதனால், பூமியில் பயிர்கள் விளையலாம். ஆனால், நாங்கள் பயிர் செய்யும் வேலை செய்பவர்களல்ல. மாடு மேய்த்து பிழைப்பவர்கள். எங்களுக்கு பசுக்களே தெய்வம். யாருக்கு எந்த வேலை தரப்பட்டிருக்கிறதோ, அதை ஒழுங்காகச் செய்தாலே, உலகத்தின் இயக்கம் தளராது. இந்த மக்கள் எனது பூமியில் உள்ளனர். படிக்காத இவர்கள், எந்தப் பாவமும் செய்யாதவர்கள். பாவம் செய்யாதவர்களுக்கு தேவர்கள் தண்டனை தருவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. நீயோ, இவர்களைத் தண்டித்தாய். இங்கிருக்கும் கோவர்த்தன மலையில் பெய்யும் மழையால் புற்கள் ஏராளமாக வளரும். அவற்றை உண்ணும் பசுக்கள் ஏராளாமாக பால் தரும். எனவே, அவர்கள் உன்னை வணங்குவதில் அர்த்தமில்லை எனக்கூறி, மலையை வணங்கச் செய்தேன். இயற்கையே மனிதனின் முதல் தெய்வம். இயற்கையைக் காப்பாற்றுவோரை இறைவன் காப்பாற்றுவான், என்றார். இந்திரன் கண்ணனிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டு இந்திரலோகம் திரும்பினான்.

மலைகள், நீர்நிலைகள், நிலம், காற்று ஆகியவை இறைவனால் நமக்கு அருளப்பட்டவை. அவற்றை அசுத்தப்படுத்தாமலும், தெய்வம் போல் நினைத்து பயந்து நடந்தால் நமக்கு எவ்வித துன்பத்தையும் இறைவன் தரமாட்டான்.

ஹரே கிருஷ்ணா….

Tuesday, June 21, 2011

Archavatara promo

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

Sunday, May 8, 2011

ஹரே க்ருஷ்ண

clip_image001

 

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

Monday, March 21, 2011

ராம அவதாரம்- 3

ராம அவதார‌ம் 1

ராம அவதாரம் 2

இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு, இராமர் அனுமாரை அனுப்பினார். உடனே அனுமார் கடலைத்தாண்டி இலங்கையை அடைந்தார். எங்கும் தேடினார். கடைசியாக அசோக வனத்தில் சீதை இருப்பதைக் கண்டார். இராமர் கூறிய செய்திகளைக் கூறிவிட்டு திரும்பி வந்தார். இராமரிட‌ம் வந்து பணிவுடன் சீதை இருக்கும் இடத்தைத் தெரிவித்தார்.
அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லவேண்டும். எனவே வாணர்கள் கல்லையும் மரத்தையும் கொண்டு கடலில் அணைகட்டின. அவ்வணையின் வழியாக அனைவரும் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்றனர்.
இராவணனுக்குக் கும்பகருணன், வீடணன் என்ற இரண்டு தம்பியர் உண்டு. அவருள் வீடணன் நல்ல அறிஞன். அவன் இராவணனுக்குப் பல அறிவுரைகள் கூறினான். சீதையைக் கொண்டு போய்விட்டு விடும்படியும் சமாதானமாக வாழும்படியும் கூறினான். இராவணன் மறுத்துவிட்டான். எனவே, வீடணன், இராவணனை விட்டு விட்டு இராமர் பக்கம் வந்து சேர்ந்து கொண்டான்.
பிறகு, இராமரின் படைகளுக்கும், இராவணனின் படைகளுக்கும் போர் தொடங்கியது. போரில் இராவணன் தம்பி கும்பகர்ணன் மாண்டான். இராவணன் மகன் இந்திரசித்தும் மாண்டான். படைவீரர்கள் பலரும் மாண்டனர்.
கடைசியாக இராமருக்கும் இராவணனுக்கும் போர் கடுமையாக நடந்தது. முடிவில் இராமர் : இராவணனைக் கொன்றார். அதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்தனர். இலங்கைக்கு அரசனாக வீடணனுக்குப் பட்டம் கட்டினார் இராமர்.
இராமர் சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பி வந்தார். பரதன் இராமரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தான்.

இராமர் அயோத்திக்கு அரசராக முடிசூட்டிக்கொண்டார். தம்பியர் துணையுடன் சிறந்த முறையில் நாடாண்டார். மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

-வெப்துனியா

Thursday, March 17, 2011

ராம அவதாரம் 2

ராம அவதார‌ம் 1

கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். தந்தை சொற்படி இராமர் உடனே காட்டிற்குச் சென்றார். சீதையும், இலக்குவனும் உடன் சென்றனர். அதனை அறியாத தசரதன் உயிர் துறந்தான்.
கேகய நாட்டிற்குச் சென்ற பரதன் அப்பொழுதுதான் திரும்பி வந்தான். வந்தவுடன் நடந்ததை அறிந்தான். மிகவும் வருந்தினான். தன் தாயை வெறுத்தான். தந்தைக்குரிய ஈமக்கடன்களைச் செய்தான். உடனே இராமரை அழைத்து வரக் காட்டிற்குச் சென்றான்.
காட்டிற்குச் சென்ற பரதன், இராமரைக் கண்டு வணங்கினான். திரும்பி வந்து நாடாளும்படி வேண்டினான். தந்தை சொற்படி பதினான்கு ஆண்டு கழித்து வருவதாகவும், அது வரை பரதனை நாட்டை ஆளும்படி இராமர் கூறினார். பரதன் இராமரின் பாதுகைகளைப் பெற்று வந்து, அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்தான்.
இராவணன் என்னும் அரக்கன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன் தங்கை சூர்ப்பனகை ஆவாள். அவள் காட்டில் வாழும் இராம இலக்குவனரைக் கண்டாள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினாள். இலக்குவன் கோபம் கொண்டு சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து எறிந்தான்.
சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணனிடம் சென்றாள். நடந்த செய்திகளைச் சொல்லவில்லை. `இராமன் மனைவி சீதையை உனக்காக தூக்கி வர முயன்றேன். அவன் தம்பி இலக்குவன் என் மூக்கை அறுத்துவிட்டான்' என்று கூறி அழுதாள். இராவணன், சூர்ப்பனகையைச் சமாதானப்படுத்தினான். அவர்களைத் தண்டிப்பதாகவும் கூறினான்.
இராவணன், மாரீசன் என்பவனை மாயமானாக அனுப்பி இராம இலக்குவரைத் தனியாகப் பிரித்தான். பிறகு, சீதை தனித்து இருப்பதை அறிந்து பர்ணசாலையோடு பெயர்த்துச் சீதையை தூக்கிக் கொண்டு சென்றான். வழியில் கழுகு அரசனாகிய சடாயு தடுத்தான். அவனை வெட்டி வீழ்த்தி விட்டு இராவணன் இலங்கையில் உள்ள அசோக வனத்தில் சீதையை மறைத்து வைத்தான்.

திரும்பி வந்த இராம,இலக்குவர் சீதையைக் காணாமல் தேடினர். வருந்தி வந்து கொண்டிருக்கும்பொழுது குற்றுயிராய்க் கிடந்த சடாயு என்ற கழுகு அரசன் உண்மையைக் கூறிவிட்டு உயிர் துறந்தான்.
தொடர்ந்து தேடி வரும்பொழுது சுக்ரீவனைச் சந்தித்தனர். சுக்ரீவன் வாணர்கள் அரசனாகிய வாலியின் தம்பி ஆவான். வாலி தன்னை துரத்தி விட்டதாகக் கூறினான் சுக்ரீவன். உடனே இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டினார். பிறகு சுக்ரீவனும் அனுமாரும், வாணரபடைகளும், இராமருக்குத் துணையாக வந்தனர்.

தொடரும்……

Tuesday, March 15, 2011

சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன?

 

``காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்img1090221037_1_1
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்‘‘- என்கிறார் சேக்கிழார்.
திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள் உரைக்கப்பட்டுள்ளன.
தத்துவம்
கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது.
பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
பிருகு முனிவரின் சாபத்தால் சிவலிங்க வழிபாடு ஏற்பட்டதாக புராணங்கள் சிலவற்றில் சொல்லப்படுவதும் இடைச்செருகலே என்பது ஞானிகளின் கருத்தாக உள்ளது. தட்சிணாமூர்த்தியாய் உள்ள கால காலனை சபிக்கக்கூடிய ஆற்றல் எந்த முனிவருக்குத் தான் இருந்து விட முடியும்?
லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.
லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.
இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம்.
இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.

- -வெப்துனியா

Saturday, March 12, 2011

ராம அவதாரம் 1

ராம அவதார‌ம்

தசரதன் என்ற அரசன் அயோத்தியை அரசாண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர் உண்டு. எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். அதன் பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர்.

தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார்.
இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர்.
தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர்.
விசுவாமித்திரர் என்ற முனிவர் காட்டில் வேள்வி செய்தார். தாடகை முதலான அரக்கர்கள் அவர் வேள்விக்கு இடையூறு செய்தனர். விசுவாமித்திரர் தசரதனிடம் வந்தார். தம் வேள்வியைக் காக்கும் பொருட்டு இராமனை அனுப்புமாறு கேட்டார். தசரதர் இராமனுடன் இலக்குவனையும் அனுப்பி வைத்தான். இராமரும், இலக்குவனும் தாடகை முதலாய அரக்கர்களை வதம் செய்து முனிவர் வேள்வியைக் காத்தனர். வேள்வியும் சிறந்த முறையில் முடிந்தது.
பிறகு விசுவாமித்திரர் இராமனையும் இலக்குவனையும் அழைத்துக் கொண்டு மிதிலை சென்றார். சனகன் என்ற மன்னன் மிதிலையை ஆண்டுவந்தான். அவனுக்குச் சீதை என்ற ஓர் அழகிய மகள் இருந்தாள். தம்மிடம் உள்ள வில்லை வளைப்பவருக்குச் சீதையைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவன் அறிவித்திருந்தான்.
மன்னர்கள் பலர் அவ்வில்லை வளைக்க முயன்றனர்,முடியவில்லை. இராமர் அவ்வில்லை வளைத்து முறித்தார். சனகன் மகிழ்ந்து தன் மகள் சீதையை இராமருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

திருமணம் முடிந்து வந்த இராமருக்கு முடிசூட்ட எண்ணினான் தசரதன். அதற்கு நாளும் குறித்து விட்டான். எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.
கைகேயியின் தாதி கூனி ஆவாள். அவள் கைகேயியின் மகன் பரதனுக்கு முடிசூட்ட எண்ணினா‌ள். அதனை கைகேயியிடம் தெரிவித்தாள். முதலில் கைகேயி ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு பலவிதமாகச் சொல்லிக் கூனி கைகேயியின் மனத்தை மாற்றிவிட்டாள்.

தொடரும்……

Thursday, February 10, 2011

2. அசைவ உணவு நோயற்றதா?

2.1. மிருகங்களின் உடல்களிலும் நோய்கள்

கொல்லப்படும் மிருகங்களின் உடலிலும் மனிதனின் உடலைப் போலவே எண்ணற்ற நோய்களும், நோய்க்கிருமிகளும் உள்ளன என்பதையும், உண்பவரின் உடலை அவை எளிதில் அடைகின்றன என்பதையும், அசைவ உணவு உண்பவர்கள் மறக்கக் கூடாது.

உதாரணமாக 1972 ல் ஏறக்குறைய கண் புற்று நோய் உடைய ஒரு லட்சம் மாடுகளும் , கல்லீரலில் சீல் பிடித்த கட்டியுடைய 35 லட்சத்து 96 ஆயிரத்து 302 மாடுகளும், கப வாதம் போன்ற நோய் உடைய லட்சக்கணக்கான கோழிகளும் அமெரிக்க அரசங்கத்தால் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டன.

2.2. இறந்த உடல் விரைவில் அழுகும்

images 2 copyகொல்லப்பட்ட மிருகங்களின் உடல் விரைவில் அழுக ஆரம்பித்துவிடும் என்பதையும், உண்பதற்க்கு முன் பாக்டீரியாக்கள் பெருகி, அழுகிய நிலையை அந்த உடல் அடையும் என்பதையும், அசைவ உணவு உண்பவர்கள் மறக்கக் கூடாது.

2.3. மரண பய விஷம் இறந்த உடலில் உண்டு

கொல்லப்படும் மிருகங்கள், மரண பயத்தினால் சுரக்கக் கூடிய அட்ரீனலின் ரத்தத்துடன் கலந்து, அவற்றின் உடல் விஷத் தன்மையை அடைகிறது. உண்பவரையும் அந்த விஷம் அடைகிறது.

2.4. மிருக உடலைப் பாதுகாக்கும் மருந்து மனிதனுக்கு கேடு

மிருகங்imagesகளை நோயிலிருந்து காப்பாற்றவும், அவைகளின் எடையைக் கூட்டுவதற்காகவும், வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காகவும் பெனிசிலின் மற்றும் 2700 விதமான மருந்துகளை கால்நாடை வளர்ப்போர் தொடர்ந்து அம்மிருகங்களுக்கு கொடுக்கின்றனர். அம்மிருகங்கள் இறந்த பின்னும் அவற்றின் உடலில் '” டைதில்ஸ்டில் பெஸ்ட்ரேல்  டிஇஎஸ் ஆர்ச்செனிக்,  சோடியம் நைட்ரேட் போன்ற மனி்த உடலுக்கு பெரிதும் கெடுதி விளைவிக்கக் கூடிய  கொடிய விஷங்கள் உள்ளன. இதனால், இத்தகைய அசைவ உணவை உண்பவர்கள் ஏராளமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள்.

2.5 அசைவம் உண்ணும் மனிதனின் உடலும், குடலும் நோய்களின் இருப்பிடம்.

மனிதனின் உடலமைப்பு அசைவ உணவை உண்பதற்கும், ஜீரணிப்பதற்க்கும், வெளியேற்ருவதற்க்கும் பொருத்தமில்லாமல் அமைந்திருப்பதால் ஏராளமான நோய்கள், அசைவ உண்பவர்களுக்கு உண்டாகிறது. மனிதனுடைய குடல் அசைவ உணவை சரியாக ஜீரணிக்க முடியாததாலும் விரைவில் அழுகக் கூடிய அசைவ உணவு மனிதனின் நீண்ட குடலில், அதிக நேரம் தங்குவதாலும் குடல் புற்று நோய் உண்டாகிறது. இறந்த மிருகங்களின் உடலில் உள்ள அளவற்ற கொழுப்பு, மனிதனின் இரத்தத் தமனிகளின் உட்சுவர்களில் படிந்து அவற்றை பெருக்கச் செய்கிறது. அதனால், இருதயத் தாக்கு, இரத்த உறைவு போன்ற பயங்கரமான நோய்கள் ஏற்படுகின்றன. அசைவ உணவை ஜீரணிப்பதில் அதிகமாகப் பாடுபடுவதால் உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் விரைவில் பாதிக்கப்படுகின்லறது.

அடு்த்து பதிவு (3. அசைவ உணவு சுவையானதா )

இஸ்கான்.

ஹரே க்ருஷ்ணா

Friday, January 28, 2011

அசைவ உணவு தேவையா? உடலுக்கு ஏற்றதா ?

1.அசைவ உணவு உடலுக்கு ஏற்றதா ?

மனிதனின் உடலமைப்பை, அசைவ உணவு உண்ணும் புலி, சிங்கம், பூனை, நாய் போன்ற விலங்குகளின் உடல் அமைப்போடும், தாவர உணவு உண்ணும் பசு, யானை, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் உடலமைப்போடும் ஒப்பிட்டுப் பார்க்கையில்  ஆச்சரியப்படும் வகையில் மனிதனின் உடலமைப்பானது தாவர உணவு உண்ணும் விலங்குகளின் உடலமைப்போடு மட்டுமே ஒத்துப் போகிறது.

1.1 பொருந்தாத பார்வை, நகங்கள், முன் பற்கள்

eurasian_eagle_owl

  அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு இரையைப் பிடிக்க வசதியாக இயற்கையாகவே இருளிலும் பரர்க்கும் சக்தியும், இரையைக் கிழித்துண்ண வசதியாக கைகளில் கூறிய நகங்களும், வாயில் கோரைப்பற்களும் உள்ளன. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இத்தகைய உடலமைப்பு இல்லை. அதிலும், மனிதன் மட்டும் செயற்கையாக அரிவாள் , கத்தியுடன் விலங்குகளைக் கொல்கிறான்.

1.2 பொருந்தாத கமடைவாய்ப் பற்கள்

Untitled-2 copyஅசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு தட்டையான, கடைவாய் பற்கள் இல்லை. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குக்களுக்கும், மனிதர்களுக்கும் தாவார உணவை அரைத்து உண்ண foxவசதியாக தட்டையான கடைவாய்ப் பற்கள் உண்டு.

1.3 பொருந்தாத உமிழ்நீர்

அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு வாயில் சுரக்கும் உமிழ்நீர், ஜீரணிக்கக் கடினமான மாமிசத்தை மென்மைப்படுத்த, இயற்கையாகவே அமில சக்தி அதிகம் உள்ளதாய் உள்ளது. ஆனால் தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீர் கார சக்தி அதிகம் உள்ளதாகவும், நிறைய உமிழ்நீர் சுரந்து ஜீரணத்தை அதிகப்படுத்தும்வண்ணம் உமிழ்நீர் சுரப்பிகள் பெரியதாகவும், டாயலின் என்ற என்சைம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. அதிலும் மனி்தன் மட்டும் செயற்கையாக பிரஷர் குக்கரில் மாமிசத்தை அதிக நேரம் வேக வைத்து மென்னைப்படுத்துகின்றான்

1.4 பொருந்தாத நீர் அருந்தும் பழக்கம்

அசைவ உணவு உண்ணும் விலங்குகள் தங்கDogளுடைய நீண்ட நாக்குகளை நீட்டி நக்கிக் குடிக்கின்றன. ஆனால் தாவார உணவை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும் உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன.

1.5 பொருந்தாத சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அமைப்பு

அசைவ உணவு உண்ணும் விலங்குகளின் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரு கழிவு நீக்கும் உறுப்புக்களும் பெரியதாக இருப்பதால் மாமிசத்தினால் ஏற்படும் அதிக கழிவுகளை உடனடியாக வெளியேற்றுகிறது. ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இரண்டும் சிறியதாக இருப்பதால் அதிகமான அளவில் உருவாகும் அசைவக்கழிவுகளை வெளியேற்ற முடிவதில்லை. மாறாக, இவை குறைந்த அளவில் உருவாகும் தாவர உணவினால் வரும் கழிவுகளை வெளியேற்றும்வண்ணம் மட்டுமே அமைந்துள்ளன. மாமிச உணவு உண்ணும் மனிதனுக்கு இயற்கை உதவாததால் செயற்கையான மருந்து, மாத்திரைகள் மூலம் இதற்கு வழி காண முயற்சிக்கிறான்.

1.6 பொருந்தாத குடலமைப்பு

அசைவ உணவு உண்ணும் விலங்குகளின்

அசைவ உணவு உண்ணும் விலங்குகளி்ன் குடல் பகுதி உடல் நீளத்தைப் போல் மூன்று மடங்கு மட்டுமே நீளமானதாக இருப்பதால், விரைவில் கெடக் கூடிய அசைவ உணவு விரைவில் வெளியேற்றப்படுகிறது.ஆனால், தாவர உணவு உண்ணும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் குடல் பகுதி உடல் நீளத்தைப் போல் பத்து முதல் பனிரெண்டு மடங்கு வரை நீளமானதாக இருப்பதால் விரைவில் கெடாத தாவர உணவுகள் நீண்ட நேரம் தங்கக் கூடிய வகையில் குடலமைப்பு உள்ளது. அதே சமயம் இந்த நீண்ட குடலமைப்பானது, விரைவில் கெடக் கூடிய அசைவ உணவை, விரைவில் வெளியேற்றாமல் நீண்ட நேரம் தங்க வைப்பதால், குடலானது பாதிப்படைகிறது.

1.7 மாறுபட்ட வியர்வை வெளியேற்றம்

அசைவ உணவு உண்ணும் விலங்குகள், உடலைக் குளிரச் செய்ய நாக்கைத் தொங்கவிட்டவாறு வேகமாக சுவாசிக்கின்றன. தாவர உணவு உண்ணும் விலங்குகள் மறறும் மனிதர்கள் உடலைக் குளிரச் செய்ய தோலில் உள்ள கோடிக்கணக்கான வியர்வைத் துவாரங்கள் வழியாக வியர்க்கின்றன.

 

அடு்த்து பதிவு(2. அசைவ உணவு நோயற்றதா ?)

இஸ்கான்.

ஹரே க்ருஷ்ணா

Tuesday, January 25, 2011

குடியரசுதின வாழ்த்துக்கள்

 

வாழ்க இந்தியா!  வளர்க பாரத மக்கள்!!  பரவட்டும் உலகெல்லாம் பாசமும்
நேசமும்!!!  சூரியனைக் கண்ட பனிபோல ஒழியட்டும் மக்களிடையே விரோத மனப்
பாங்கு!!!!

happy_republic_day1

                                                  அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

Saturday, January 8, 2011

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-5 பாதம் –29

clip_image001

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 5

பாதம் – 29

போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஷ்வரம்

ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் ஜ்ஞாத்வா மாம் ஷாந்திம்ருச்சதி

போக்தாரம் -அனுபவிப்பன்

யஜ்ஞ – யாகங்கள்

தபஸாம் - தவங்கள்

ஸர்வலோக – எல்லா லோகங்களும் அங்குள்ள தேவர்களும்

மஹா ஈஷ்வரம் – உயர் அதிகாரி

ஸுஹ்ருதம் – உற்ற நண்பன்

ஸர்வ - எல்லா

பூதானாம் - உயிர்வாழிகள்

ஜ்ஞாத்வா – என்று அறிந்து

மாம் – என்னை பகவான் கிருஷ்ணர்

ஷாந்திம் – உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை,

ருச்சதி – அடைகிறான்

மொழிப்பெயர்ப்பு

நானே,  எல்லா யாகங்களையும் தவங்களையும் இருதியில் அனுபவிப்பவன் என்றும், எல்லா லோகங்களையும் தேவர்களையும் கட்டுப்படுத்துபவன் என்றும், எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்றும் அறிந்து, என்னை பற்றிய முழு உணர்வில் இருப்பவன், ஜடத் துயரங்களிலிருந்து விடுபட்டு அமைதி அடைகிறான்.

பொருளுரை

மாயச் சக்தியின் பிடியில் சிக்கியுள்ள அனைத்து கட்டுண்ட ஆத்மாக்களும், பௌதிக  உலகில் அமைதியைத் தேடுகின்றனர். ஆனால் பகவத் கீதையின்  இப்பிரிவில் கூறப்பட்டிருக்கும் அமைதிக்கான வழி என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அமைதிக்கான மிகச்சிறந்த வழி என்ன இதுவே, மணிதனின் எல்லா செயல்களையும் அனுபவிப்பவர் பகவான் கிருஷ்ணரே, அவரே எல்லா லோகங்களுக்கும் தேவர்களுக்கும் உரிமையாளர் எனபதால்,மனிதர்கள் அவரது திவ்ய சேவைக்காக அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். அவரைவிட உயர்ந்தவர் எவருமில்லை. தேவர்களில் தலைசிறந்தவர்களான சிவபெருமானையும்  பிரம்மதேவரையும்விட, அவரே சிறந்தவர். வேதங்களில் ( ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 6.7 ) முழுமுதற்க் கடவுள் , தம் ஈஷ்வராணாம் பரமம் மஹேஷ்வரம் என்று வர்ணிக்கப்படுகிறார். மாயைின் மயக்கத்தால், காணும் எல்லாவற்றிற்கும் தானே எஜமானன் என்று ஜீவன்கள் எண்ணினாலும், உண்மையில் அவர்கள் இறைவனின் ஜடச் சக்தியால் அளப்படுகின்றனர். பகவானே ஜட இயற்கையின் எஜமானர், கட்டுண்ட ஆத்மாக்களோ ஜடஇற்கையின்  கடுமையான சட்டங்களுக்கு உட்பட்டவர்கள். இந்த அப்பட்டமான உண்மையினை உணராதவரை, தனிப்பட்ட முறையிலோ பலபேர் ஒன்று கூடியோ, இவ்வுலகில் அமைதியைக் காண்பது சாத்தியம்மில்லை. இதுவே கிருஷ்ண உணர்வில் அறியப்படுவதாகும். பகவான் கிருஷ்ணரே பரம அதிகாரி, மாபெரும் தேவர்கள் உட்பட  எல்லா ஜீவன்களும் அவரது சேவர்களே.பூரண கிருஷ்ண உணர்வில் மட்டுமே பக்கு வமான அமைதியை அடைய இயலும்.

கரம யோகம் என்ற பெயரால் பொதுவாக அறியப்படும்  இந்த ஐந்தாம் அத்தியாயம் கிருஷ்ண உணர்வின் பயிற்சி விவரமாகும். கர்ம யோகம் எவ்வாறு முக்தியளிக்க முடியும் என்ற கற்பனைக் கேள்விக்கு இங்கு பதில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ண உணர்வில் செயலாற்றுவது  என்றால் பகவான் கிருஷ்ணரே ஆளுநர் என்ற முழு ஞானத்துடன் செயலாற்றுவதாகம். இத்தகைய செயல் திவ்ய ஞானத்திலிருந்து வேறுபட்டதல்ல.நேரடியான கிருஷ்ண உணர்வு பக்தி யோகம் எனப்படும் ஞான யோகம் என்பது பக்தி யோகத்திற்கு இட்டுச் செல்லும் பாதையாகும். பரம உண்மையுடனான ஒருவது உறவைப் பற்றிய முழு ஞானத்துடன் செயல்படுவதே கிருஷ்ண உணர்வாகும். மேலும், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரைப் பற்றிய முழு ஞானமே அந்த உணரவின் பக்குவ நிலையாகும். கடவுளின் மிகச்சிறிய அம்சமான ஆத்மா, அவரது நித்தியத் தொண்டனாவான். ஆத்மா மாயையை ஆட்சி செய்ய விரும்பும்போது, அதனுடன் அவன் தொடர்பு கொள்கிறான். இதுவே அவனது பல்வேறு துயரங்களுக்குக் காரணம். அவன் ஜடத்துடன் தொடர்பு கொண்டுள்ளவரை,அதன் தேவைகளுக்காகச் செலாற்றுதல் அவசியம். இருப்பினும், ஜடத்தின் எல்லைக்குள் இருக்கும்போதிலும், கிருஷ்ண உணர்வானது ஒருவனை ஆன்மீக வாழ்விற்குக் கொண்டு வருகிறது. ஏனெனில், ஜடவுலகில் பயிற்சி செய்யப்படும்போதிலும் ஆன்மீக வாழ்வினை இஃது எழுச்சி பெறச் செய்கின்றது. ஒருவன் எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளானோ, அந்த அளவிற்கு அவன் ஜடத்தின் பிணைப்பிலிருந்து விடுபட்டுள்ளான். கடவுள்   யாரிடமும் பாரபட்சம் பார்ப்பதில்லை. கிருஷ்ண உணர்வில் அவன் செய்யும் கடமைகளைப் பொறுத்ததே அவனது பலன்கள். அக்கடமைகள் புலன்களை அடக்குவதற்க்கும், கோபம், ஆசை ஆகியவற்றின் தாக்குதலை வெல்வதற்க்கும் உதவியாக அமைகின்றன. மேற்க்கூறிய எழுச்சிகளை அடக்கி, கிருஷ்ண உணர்வில்  நிலையாக நிற்பவன், உண்மையில் ப்ரஹ்ம நிர்வாண எனும் திவ்யாமான நிலையில் உள்ளான். கிருஷ்ண உணர்வை பயிற்சி செய்யும் போது, தானாகவே அஷடாங்க யோக முறையும் பயிற்சி செய்யப்படுகிறது; அடையப்படுகின்றது. அஷ்டாங்க யோக முறையில் யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தாரணாத்யான, ஸமாதி என்னும் படிப்படியான வழியில் முன்னேற்றம் அடையப்படுகிறது. ஆனால் பக்தித் தொண்டின் பக்குவத்துடன் ஒப்பிடும்போது, இவை ஒரு முன்னுரையைப் போன்றவை. பக்தித் தொண்டு மட்டுமே மனிதனுக்கு அமைதியை நல்கும். பக்தியே வாழ்வின்  மிக உன்னதமான பக்குவநிலையாகும்.

 

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

Saturday, January 1, 2011

பகவத்கீதை உண்மையுருவில்- அத்யாயம்-5 பாதம் –12

clip_image001

 

CLICK THE IMAGE TO READ IN ENGLISH

அத்யாயம் – 5

பாதம் – 12

யுக்த:கர்மபலம் த்யக்த்வா ஷாந்திமாப்நோதி நைஷ்டிகீம்।
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே

யுக்த – பக்தித் தொண்டில் ஈடுபட்டவன்

கர்மபலம் – எல்லா செயல்களின் பலன்கள்

த்யக்த்வா – துறந்து

ஷாந்திம் – பூரண அமைதி

ஆப்னோதி – அடைகிறான்

நைஷ்டிகீம் – அசைவற்ற

அயுக்த – கிருஷ்ண உணர்வில்  இல்லாதவன்

காமகாரேண – செயலின் பலனை அனுபவிக்க விரும்புவதால்

பலே – பலன்களில்

நிபத்யதே – பந்தப்படுகிறான்

மொழிப்பெயர்ப்பு

பக்தியில் உறுதியாக உள்ள ஆத்மா, எல்லச் செயல்களின் பலனையும் எனக்கே அர்ப்பணிப்பதால்,பூரண அமைதியை அடைகிறான் ஆனால் தெய்வீகத்துடன்   இணையாதவனோ, தனது முயர்சியின் பலனை அனுபவிக்கும் பேராசையால் பந்தப்படுகிறான்./

பொருளுரை

கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கும் உடல் உணர்வில் இருப்பவனுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனி்ல், கிருஷ்ண உணர்வினன் கிருஷ்ணரிடமும்,உடல் உணர்வினன் தனது செயல்களின் பலன்களிலும் பற்றுதல் கொண்டிருப்பதே. கிருஷ்ணரிடம் பற்றுதல்தகொண்டு அவருக்காக செயல்படுபவன், நிச்சயமாக முக்தி அடைந்தவனாவான். அவன் தனது செயல்களின் பலனில் எவ்வித ஏக்கமும் கொள்வதில்லை. இருமையின் உணர்வில் செயல்படுவதே, அதாவது பூரண சக்தியத்தின் ஞானமின்றி செயல்படுவதே, செயலின் பலன்களின் மீதான ஏக்கத்திற்கு காரணம் என்று பாகவதத்தில் விளக்கப்பட்டுள்ளது. புருஷோத்தமரான கிருஷ்ணரே பரம பூரண உண்மை. கிருஷ்ண உணர்வில் இருமை கிடையாது. இருப்பவை எல்லாமே கிருஷ்ண சக்தியின் படைப்பே,கிருஷ்ணர் நன்மையின் உருவம். எனவே, கிருஷ்ண உணர்வின் செயல்கள்  பூரண தளத்தில் செயல்படுபவை, திவ்யமான அச்செயல்களுக்கு பௌதிக விளைவுகள் கிடையாது. இதனால் ஒருவன் கிருஷ்ண உணர்வில் அமைதி நிறைந்தவனாக உள்ளான். ஆனால் புலனுகர்ச்சிக்கான இலாபக்கணக்கில் மூழ்கியவன் அந்த அமைதியினைப் பெற முடியாது. கிருஷ்ணருக்குப் புறம்பே எதுவும்மில்லை என்பதே அமைதி மற்றும் அச்சமின்மையின் தளம் – இதனை உணர்வதே கிருஷ்ண உணர்வின் இரசியமாகும்

 

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண

க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

 

Copyright 2008 All Rights Reserved By Saran.Jkp